நெல்லை- டிராவல்ஸ் அதிபர்   ரயில் முன் பாய்ந்து தற்கொலை

by Editor / 24-07-2021 08:04:14pm
நெல்லை- டிராவல்ஸ் அதிபர்   ரயில் முன் பாய்ந்து தற்கொலை

 

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள வாகைக்குளம் நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்த ராஜகோபால் என்பவரின் மகன் வெங்கடேஷ் (33). இவருக்கு திருமணமாகி கலைச்செல்வி என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர்.
வெங்கடேஷ் சென்னையில் டிராவல்ஸ் நடத்தி வந்த நிலையில் கடன் பிரச்சினை காரணமாக சொந்த ஊருக்கு வந்து உள்ளார். அவர் சிறிது நாட்களாகவே கடன் பிரச்சினை காரணமாக மிகுந்த மனஅழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் இன்று அதிகாலையில் தென்காசிலிருந்து நெல்லை  செல்லும் ரயிலில்  புளியங்குளம் கேட் அருகில்  ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via