கிழிந்த ஜீன்ஸ் அணிந்து வர மாணவர்களுக்கு தடை
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஏசிஜே போஸ் கல்லூரியில் டோர்ன் ஜீன்ஸ் எனப்படும் கிழிந்த ஜீன்ஸ் பேண்ட்களை அணிந்து வர மாட்டோம் என மாணவர்களிடம் உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கொல்கத்தாவில் உள்ள ஏசிஜே போஸ் கல்லூரி இணையதளத்தில் உள்ள சேர்க்கை அறிவிப்பில் முறையான ஆடைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கல்லூரியின் இந்த நடவடிக்கைக்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Tags :