நான் அஞ்சவில்லை, ஓடி ஒளியவில்லை! - சீமான் விளக்கம்

by Staff / 01-09-2023 01:17:05pm
நான் அஞ்சவில்லை, ஓடி ஒளியவில்லை! - சீமான் விளக்கம்


தேர்தல் நேரத்தில் என் பணிகளை முடக்கும் வகையில் வீண் பழி சுமத்தப்படுகிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், என் மீதான புகார் குறித்து விசாரித்து, தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும். தேர்தல் நேரத்தில் என்னை பணி செய்ய விடாமல் தடுக்கவே இப்படி செய்கின்றனர். 11 வருடமாக ஒரே குற்றச்சாட்டை கூறி வருகின்றனர். உன் மேல வைக்கும் குற்றச்சாட்டு உண்மை இல்லை என்றால் அதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நான் அஞ்சவில்லை எங்கும் ஓடி ஒளியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags :

Share via