பூரி கேட்டு தகராறு - கணவனை கொன்ற மனைவி

by Staff / 02-09-2023 05:19:16pm
பூரி கேட்டு தகராறு - கணவனை கொன்ற மனைவி

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குப்பாயி வலசு கிராமத்தை சேர்ந்தவர்கள் செல்லமுத்து - பொன்னாத்தாள் தம்பதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 27ஆம் தேதி நள்ளிரவில் வீட்டிற்கு வந்த செல்லமுத்து பூரி போட்டு தருமாறு கேட்டு தனது மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். கோவத்தில் இருந்த பொன்னாத்தாள் எண்ணையை சூடாக காய்ச்சி தூங்கிக் கொண்டிருந்த கணவர் மீது ஊற்றியுள்ளார். உறவினர்கள் செல்லமுத்துவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பொன்னாத்தாளை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

Tags :

Share via