தங்க முதலீட்டு பத்திரத்தினை திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் முதலமைச்சரிடம் வழங்கினார்.
தலைமைச்செயலகத்தில்,இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு பக்தர்களால் உண்டியல் மற்றும் காணிக்கையாக செலுத்தப்பட்ட பலமாற்றுப் பொன் இனங்களில் திருக்கோயிலுக்குத் தேவைப்படும் இனங்கள் நீங்கலாக இதர இனங்களை மும்பையிலுள்ள ஒன்றிய அரசின் உருக்காலையில் உருக்கி தூய தங்கக்கட்டிகளாக முதலீடு செய்யப்பட்டதற்கான தங்க முதலீட்டு பத்திரத்தினை திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் முதலமைச்சரிடம் வழங்கினார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கேலோ இந்தியா மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 134 வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூ. 2.24 கோடி வழங்கிடும் அடையாளமாக 10 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலைகளை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்வழங்கினார்.
Tags :