மின்னல் தாக்கி 12 பேர் பலி

by Staff / 04-09-2023 04:39:49pm
மின்னல் தாக்கி 12 பேர் பலி

ஒடிசாவில் கனமழையின்போது இடி, மின்னல் தாக்கி ஆறு மாவட்டங்களைச் சோ்ந்த 12 போ் பலியாகியுள்ளனர், 14 பேர் காயமடைந்துள்ளனர். வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக ஒடிசா மாநிலத்தில் பரவலாக இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை பெய்த கனமழையின்போது பதிவாகிய 36,957 மின்னல்களில் 25,753 தரையைத் தாக்கின. அவ்வாறு மின்னல் தாக்கி குா்தா மாவட்டத்தில் 4 போ், போலான்கிா் மாவட்டத்தில் 2 போ், அங்குல், பௌத், தேன்கானால், கஜபதி, ஜகத்சிங்பூா், பூரி மாவட்டங்களில் தலா ஒருவா் என மொத்தம் 12 போ் பலியாகியுள்ளனர்.

 

Tags :

Share via