பல்லடம் படுகொலை - முதல்வர் நிதியுதவி

by Staff / 04-09-2023 04:42:22pm
பல்லடம் படுகொலை - முதல்வர் நிதியுதவி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிண்று கிராமத்தில் நேற்று வீட்டின் அருகே மது அருந்திய நபரை தட்டிக்கேட்டபோது ஒரே குடும்பத்தை சேர்ந்த செந்தில்குமார், மோகன், புஷ்பவதி, ரத்தினாம்பாளா ஆகிய 4 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மர்மநபர்களால் கொல்லப்பட்ட 4 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும் கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்

 

Tags :

Share via