தொழிலதிபர் ஆசிட் குடித்து தற்கொலை

by Staff / 09-03-2024 01:52:33pm
தொழிலதிபர் ஆசிட் குடித்து தற்கொலை

கோவை மணியக்காரன்பாளையம் பாலமுருகன் நகரை சேர்ந்தவர் சதீஷ்(43). இவர் சொந்தமாக நிறுவனம் நடத்தி வந்தார். இந்நிலையில், அவர் தனது நிறுவனத்தினை மேம்படுத்துவதற்காக கடன் பெற்றார். ஆனால் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் நேற்று தனது வீட்டின் கழிவறையில் இருந்த ஆசிட் பாட்டிலை எடுத்து குடித்தார். இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via