சசிகலா, இளவரசிக்கு பிடிவாரண்ட்

by Staff / 05-09-2023 10:34:33am
சசிகலா, இளவரசிக்கு பிடிவாரண்ட்

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் லஞ்சம் கொடுத்து சொகுசு வசதிகள் பெற்றதாக அளிக்கப்பட்ட புகாரில் சசிகலா, இளவரசி ஆகியோருக்கு லோக் ஆயுக்தா நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இருவரையும் வரும் அக்டோபர் 5ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு வசதிகள் பெற லஞ்சம் கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர், 4 வருட சிறை தண்டனை முடிந்து கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரியில் சசிகலா விடுதலையானார். இளவரசி பிப்ரவரி 5ஆம் தேதி விடுவிக்கப்பட்டார்.
 

 

Tags :

Share via