காவல் நிலையம் முன்பு பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற பெண்

by Staff / 06-09-2023 12:25:26pm
காவல் நிலையம் முன்பு பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற பெண்

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் காவல் நிலையம் முன்பு தன்னை காதலித்து ஏமாற்றிய வாணிபுத்தூரை சேர்ந்த வசந்த் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சத்தியமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்ஜெயசுதா வயது 24  ,கோபி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்தாா். ஏற்கனவே கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சத்தியமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன், பேரில் வசந்த் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையில் உள்ளது .இந்நிலையில் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்ய கோரி காவல் நிலையம் வந்தவரிடம் உதவி ஆய்வாளர் மேனகா  ஏற்கனவே  வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் ஒரே சம்பவத்திற்கு வழக்குகள் பதிவு செய்ய இயலாது என கூறியதன் பேரில்  ஜெயசுதா, கோபி காவல் நிலையம் முன்பு  மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்தார்  அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஜெயசுதாவை மீட்டு கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 

 

Tags :

Share via