நான் எந்த தவறும் செய்யவில்லை: சந்திரபாபு நாயுடு

by Staff / 09-09-2023 01:16:35pm
நான் எந்த தவறும் செய்யவில்லை: சந்திரபாபு நாயுடு

கைது நடவடிக்கை குறித்து தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு பதிலளித்துள்ளார். தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று மக்களிடம் தெரியப்படுத்துங்கள், ஆதாரம் காட்டாமல் கைது செய்யப்பட்டதாகவும் கூறினார். இதனால் அப்பகுதியில் இரவு முழுவதும் பயங்கர பரபரப்பு நிலவியதாக கூறப்படுகிறது. ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டதாக அவர் கருத்து தெரிவித்தார். எது செய்தாலும் உண்மையும், நீதியும் வெல்லும் என அவர் கருத்து தெரிவித்துள்ளார். வன்முறைகளில் ஈடுபடாமல், கட்சியினர், மக்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

 

Tags :

Share via