2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை.

by Editor / 13-09-2023 09:20:08am
 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை.

புதுக்கோட்டை: மணல் குவாரி அதிபர் ராமச்சந்திரன், அவரது உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி விடிய, விடிய அமலாக்கத்துறை சோதனை.நேற்று 8 இடங்களில் சோதனை நடந்த நிலையில், கந்தர்வகோட்டை அறியானிப்பட்டி, புதுக்கோட்டை தனியார் ஆர்க்கிடெக் நிறுவனத்தில் நடந்த சோதனை மட்டும் நிறைவு.எஞ்சியுள்ள 6 இடங்களில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே குளந்திரான்பட்டு கிராமத்தில் உள்ள திண்டுக்கல் ரெத்தனத்தின் உறவினரான கரிகாலன் என்பவரது வீட்டிலும் அமலாக்கத் துறையினர் இன்று சோதனையை விரிவுபடுத்தி உள்ளனர்.

 

Tags :  2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை.

Share via