ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சீமான் ஆதரவு
'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு ஏ.ஆர்.ரஹ்மானை சமூகவலைதளங்களில் சிலர் விமர்சித்து வருகின்றனர். இதற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில், பன்னாட்டரங்கில் உலகப்புகழ் பெற்ற ‘ஆஸ்கர்' விருதுகளை வாரிக் குவித்து, தாய்மொழி மீது கொண்ட அளப்பெரும் பற்றினால் தமிழிலேயே அம்மேடையில் பேசி, தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்த்திட்ட இசைத் தமிழன் சகோதரர் ஏ.ஆர்.ரஹ்மான் மீதானத் தனிப்பட்டத் தாக்குதல் ஒருபோதும் ஏற்புடையதல்ல. தமிழ்ப்பேரினத்தின் ஒப்பற்ற கலை அடையாளங்களுள் ஒருவராகத் திகழும் அவர், தமிழர்களின் பெருமிதத்திற்கு உரியப் பேராளுமையாவார் என அவர் தெரிவித்துள்ளார்.
Tags :