CISF உதவி ஆய்வாளரிடமிருந்து இருந்து ₹4.39 லட்சம் நூதன முறையில் திருட்டு.

by Editor / 17-09-2023 07:25:03pm
CISF உதவி ஆய்வாளரிடமிருந்து இருந்து ₹4.39 லட்சம் நூதன முறையில் திருட்டு.

சென்னை ஆலந்தூரில் CISF உதவி ஆய்வாளராக உள்ள உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த குல்பீ சிங்என்பவர் பணியாற்றிவருகிறார்.அவருடன் பணியாற்றும் காவலர் வினோத்குமார் என்பவர் தனது மனைவிடம் பேச வேண்டும் என குல்பீர் சிங்கிடம் செல்போனை வாங்கிய வினோத் குமார், அதன் பேட்டர்ன் லாக்கை பார்த்துள்ளார்.இதன் தொடர்ச்சியாக இரவு பணியின் போது குல்பீர் சிங்கின் வங்கி ஏடிஎம் கார்டு மற்றும் போனை திருடி, அவரது கணக்கில் இருந்து வினோத் குமார் தனது மனைவியின் கணக்கிற்கு ரூ. 4.39 லட்சத்தை நூதன முறையில்பணத்தை மாற்றியுள்ளார்.இதன் தொடர்ச்சியாக சொந்த ஊருக்கு செல்வதாகக் கூறி வினோத் குமார் தலைமறைவான நிலையில் அவரைத்தேடிபரங்கிமலை போலீசார் காஷ்மீர் விரைந்துள்ளனர்.
 

 

Tags : CISF உதவி ஆய்வாளரிடமிருந்து இருந்து ₹4.39 லட்சம் நூதன முறையில் திருட்டு.

Share via