குற்றால அருவியில் நீராடிய விநாயகர்

by Editor / 20-09-2023 09:11:31am
குற்றால அருவியில் நீராடிய விநாயகர்

தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தற்பொழுது கனமழை பெய்து வருகிறது இதன் காரணமாக குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துக் கொட்டி வருகிறது இந்த நிலையில் கடந்த 18 ஆம் தேதி நாடெங்கிலும் விநாயகர் சதுர்த்தி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக தென்காசி மாவட்டம் குற்றாலம் தேரடித்திடலில் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் வியாபாரிகள் சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அந்த பகுதி பொதுமக்கள் விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்து பூஜைகள் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக 19 ஆம் தேதியான நேற்று விநாயகர் விஜர்சன நிகழ்வு நடைபெற்றது .குற்றாலம் தேரடி திடலிருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு குற்றாலம் மெயின் அருவியில் கொண்டு வந்து மெயின் அருவியில் விநாயகரை குளிக்க வைத்து பின்பு மெயின் அருவி முன்பு இருக்கின்ற தடாகத்தில் விநாயகரை விஜர்சனம் செய்தனர் இதனை முன்னிட்டு  இளைஞர்கள் ஆரவாரம் செய்தனர்

 

Tags : குற்றால அருவியில் நீராடிய விநாயகர்

Share via