157 பள்ளிகளில் ஒரு மாணவர்கூட தேர்ச்சி பெறவில்லை அதிர்ச்சி தகவல்

by Staff / 29-05-2023 01:02:31pm
157 பள்ளிகளில் ஒரு மாணவர்கூட தேர்ச்சி பெறவில்லை அதிர்ச்சி தகவல்

குஜராத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், 157 பள்ளியில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குஜராத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மொத்தம் 64.62% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகள் தான் அதிகம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 70.62% மாணவிகளும், 59.58 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 1084 பள்ளிகளில் 30%க்கும் குறைவான மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், 157 பள்ளியில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை.

 

 

Tags :

Share via