வீடு இடிந்து மூன்று சிறுவர்கள் பலி
உத்திரப் பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் ரூப் நகர் காலனி அருகே சனிக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு மாடி வீடு இடிந்து விழுந்தது. இச்சம்பவத்தில் மூன்று சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன், நான்கு பேர் காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு ஆலை இயங்கி வருவதாக அப்பகுதி மக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :