பழங்குடியின மாணவிகளின் உடைகளை கழற்றி அட்டூழியம்

by Staff / 27-09-2023 12:33:08pm
பழங்குடியின மாணவிகளின் உடைகளை கழற்றி அட்டூழியம்

பாலக்காடு அருகே அட்டபாடி பழங்குடியின மாணவிகளின் உடைகளை கழற்றி துன்புறுத்தப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஷோளயூர் மேல்நிலைப்பள்ளி மாணவியர் விடுதியில் 4 ஊழியர்கள் மீது பாதிக்கப்பட்ட 15 வயதுக்குட்பட்ட எட்டு மாணவிகள் புகார் அளித்துள்ளனர். விடுதியில் உள்ள மாணவிகளில் சிலருக்கு தோல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனை பரிசோதிக்க வேண்டும் எனக்கூறி மாணவிகளின் உடைகளைக் கழற்றச் சொல்லியும், மற்ற மாணவிகளின் முன்னால் வைத்து உடைகளை கட்டாயப்படுத்தி கழற்றியதாகவும் புகார் அளித்தனர். சம்பவம் குறித்து கூடுதல் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

 

Tags :

Share via