இந்தியா மூன்று ஒருநாள் போட்டியில் முதல் வெற்றியை தனக்குரியதாக்கியது.
இன்று இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணிபந்து வீச்சை தோ்வு செய்ய,ஆஸ்திரேலியா களத்தில் இறங்கி 189 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆன நிலையில், அடுத்து ஆட வந்த இந்திய அணி 5 விக்கெட் களை சரசரவென இழந்து இந்தியா வெற்றியை இழந்து விடும் என்கிற நிலைக்கு வந்தபொழுது கே எல் ராகுல் ஜடேஜா இணையினர் விறு விறு என்று ஆட்டத்தை உச்சகட்டத்தை நோக்கி அழைத்துச் சென்றனா்.
கே எல் ராகுல் போர்களும் சி க் ஸர்களும் அடித்து இந்தியாவினுடைய வெற்றிக்கு அடித்தளம் விட்டார் .கே எல் ராகுல் மிக கவனமாகவும் பொறுப்போடும் விளையாடியதன் காரணமாக இந்தியா மூன்று ஒருநாள் போட்டியில் முதல் போட்டியில் வெற்றியை தனக்குரியது ஆக்கியது அடுத்து விசாகப்பட்டினத்திலும் சென்னையிலும் நடைபெற இருக்கின்ற இரண்டு ஒருநாள் போட்டியிலும் இந்தியா வெல்லும் பட்சத்தில் ,ஒரு நாள் போட்டியிலும் இந்தியா கோப்பையை வெல்லும் . இந்த ஆட்டத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரிலிருந்து ரசித்துப் பார்த்தார் . ஆட்டநாயகன் ரவீந்திர ஜடேஜா தேர்வானாா்
Tags :