9 மாதங்களில் 10 லட்சம் இந்தியர்களுக்கு விசா
இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் கடந்த 9 மாதங்களில் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு நுழைவு இசைவு வழங்கி சாதனை படைத்துள்ளது.கடந்த 2019 முதல் 2022 ஆண்டிகளை ஒப்பிடும்போது, 2023ஆம் ஆண்டில் 20 சதவிகிதத்துக்கும் அதிகமானவர்களுக்கு நுழைவு இசைவு வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.அமெரிக்காவுக்கு வேலை, படிப்பு, சுற்றுலா போன்ற பல்வேறு காரணங்களுக்காக பயணம் மேற்கொள்ளும் இந்தியர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
கடந்தாண்டு மட்டும் 12 லட்சம் இந்தியர்கள் பல்வேறு காரணங்களுக்காக அமெரிக்காவுக்கு நுழைவு இசைவு பெற்று பயணம் மேற்கொண்டுள்ளனர்.ஆனால், இந்தாண்டு இன்னும் 3 மாதங்கள் முழுமையாக இருக்கும் நிலையில், 10 லட்சம் நுழைவு இசைவு என்ற இலக்கை இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் அடைந்துள்ளன.
Tags :