தூக்குப்போட்டு சிறுமி தற்கொலை

by Staff / 05-10-2023 12:38:50pm
தூக்குப்போட்டு சிறுமி தற்கொலை

திருப்பூர் நல்லூர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரு டைய மகள் ஹரினிசா (வயது 15). சேலத்தில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் காலாண்டு விடுமுறைக்கு வீட்டில் இருந்துள்ளார். இந்நி லையில் சிறுமிக்கு விடுதியில் தங்கி படிக்க விருப்பம் இல்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சிறுமி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நல்லூர் போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

 

Tags :

Share via