சொகுசு கார் மோதியதில் இரண்டு பேர் பலி

by Staff / 06-10-2023 04:19:45pm
சொகுசு கார் மோதியதில் இரண்டு பேர் பலி

திருத்தணி அருகே சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் தமிழக எல்லையில் அமைந்துள்ள அலமேலு மங்காபுரம் ஊராட்சியை அம்பேத்கர் நகர் காலனி பகுதி அமைந்துள்ளது இங்குள்ள தேவாலயத்தில் ஆந்திர மாநிலம் நகரி காலனி சார்ந்த கட்டிட தொழிலாளிகளான ஆறு வேல், காஞ்சனா, சவுரி அம்மாள், ஆகிய மூன்று பேரும் தேவாலயத்தில் வேலை பார்த்துவிட்டு, ஆறு வேல் இரு சக்கர வாகனத்தில் பின்புறமாக, காஞ்சனா, சவுரியம்மாள், இவர்கள் வீட்டு நோக்கி சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தில் பின்புறம் சொகுசு கார், மோதியதில் அந்த சொகுசு கார் அருகிலுள்ள பத்தடி பள்ளத்தில் உள்ளே புகுந்து விபத்துக்குள்ளானது , இந்த சம்பவ இடத்தில் இரு சக்கர வாகனம் தூக்கி வீசப்பட்டு அதிலிருந்து ஆறு வேல், சம்பவ இடத்தில் பரிதாபமாக பலியானார், மற்ற இரண்டு பெண் கட்டட தொழிலாளியில் படுகாயங்களுடன் ஆம்புலன்ஸ் உதவியுடன் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இரண்டு பெண் கட்டட தொழிலாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர் ஆனால் சிகிச்சை பலனின்றி காஞ்சனா, என்ற பெண் பலி, மற்றொரு பெண் சவுரியம்மாள் ஆபத்தான நிலையில் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு திருத்தணி அரசு மருத்துவர்கள் பரிந்துரை செய்து அனுப்பியுள்ளனர்

 

Tags :

Share via