காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

by Staff / 10-10-2023 01:38:28pm
காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே உச்சக்கட்ட போர் சூழல் நிலவி வரும் நிலையில், காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, “இஸ்ரேல் - பாலஸ்தீனத்தில் வெடித்துள்ள போரின் விளைவாக, 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இரு தரப்பும் போர் நிறுத்தத்தை அமல்படுத்தி, பேச்சுவார்த்தையின் மூலம் நீண்டகால பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். தங்களது நிலத்தை பாதுகாப்பது, சுயாட்சி செய்வது, கண்ணியத்துடனும் மரியாதையுடனும் வாழ்வது உள்ளிட்டவை பாலஸ்தீனர்களின் உரிமை என்ற எங்களது நீண்டகால ஆதரவை மீண்டும் வலியுறுத்துகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via