இஸ்ரேலில் சிக்கிய 7000 கேரள மக்களை மீட்க பினராயி விஜயன் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெயசங்கருக்கு கடிதம்

by Staff / 10-10-2023 03:05:32pm
இஸ்ரேலில் சிக்கிய 7000 கேரள மக்களை மீட்க  பினராயி விஜயன் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெயசங்கருக்கு கடிதம்

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே உச்சக்கட்ட போர் சூழல் நிலவி வரும் நிலையில், இஸ்ரேல் நாட்டில் உள்ள 7000 கேரள மக்களின் பாதுகாப்பு குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என பினராயி விஜயன் கேட்டுக் கொண்டார். இதுகுறித்து, இன்று  வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெயசங்கருக்கு கடிதம் எழுதினார். அதில், இஸ்ரேலில் சுமார் 7000-க்கும் மேற்பட்ட கேரளாவைச் சேர்ந்த குடும்பத்தினர் மிகுந்த கவலையில் இருப்பதாகக் தெரிவித்துள்ளார். மேலும், இந்திய குடிமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு முடிந்தவரை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

 

Tags :

Share via