நடிகர் விஷால்-ஷூட்டிங் சென்ற கிராமத்திற்கு குடிநீர் வசதி செய்து அசத்தல்.

by Admin / 11-10-2023 10:06:45am
நடிகர் விஷால்-ஷூட்டிங் சென்ற  கிராமத்திற்கு குடிநீர் வசதி செய்து அசத்தல்.

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் மற்றும் நடிகை பிரியா பவானி சங்கர் இணைந்து நடிக்கும் "விஷால் - 34" திரைப்பட படப்பிடிப்பு தற்போது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விளாத்திகுளம் பகுதிகளான குமாரசக்கணபுரம், வீரகாஞ்சிபுரம், ஊசிமேசியாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பல கிராமங்களில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு குமாரசக்கணபுரம் கிராமத்திற்கு படப்பிடிப்பிற்காக சென்ற நடிகர் விஷால் அக்கிராமத்தில், குடிநீர் தட்டுப்பாடு இருப்பதாக கிராம மக்கள் கூறியதையடுத்து தற்போது லட்சக்கணக்கில் செலவு செய்து போர்வெல் இயந்திரங்கள் மூலம் அங்குள்ள கண்மாயின் கரையில் சுமார் 60 அடி ஆழம் போர் போட்டுக்கொடுத்தது மட்டுமின்றி 5000(ஐந்தாயிரம்) கொள்ளளவு கொண்ட 2 தண்ணீர் தேக்க தொட்டிகள் அமைத்து பொதுமக்கள் தண்ணீர் பிடிப்பதற்கு ஏதுவாக 6 குழாய்களையும் பொருத்தி கொடுத்துள்ளார். இப்பணிகள் நடைபெற்று வரும் வேளையில் கிராம மக்களிடம் பணிகள் நிறைவடைந்த பின் அதன் திறப்பு விழாவிற்கு தன் கட்டாயம் வருவதாக கூறிச் சென்றுள்ளார். நடிகர் விஷால் படப்பிடிப்பிற்கு வந்த இடத்தில் கிராம மக்களின் தண்ணீர் தேவையை அறிந்து சொந்த செலவில் குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுத்த சம்பவம் கிராம மக்களிடையே மட்டுமின்றி இச்செய்தியை அறிந்த அனைவரிடமும் பெரும் வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து குமாரசக்கணபுரம் கிராமத்தைச் சேர்ந்த 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி சென்னம்மாளிடம் கேட்டபோது,

நடிகர் விஷால் சில தினங்களுக்கு முன்பு படப்பிடிப்பிற்காக வந்த போது தன்னை வந்து கட்டியணைத்து முத்தம் கொடுத்ததாகவும்.. உங்களுக்கு என்ன வேண்டும் என்று விஷால் கேட்டுதற்கு, தனக்கு ஒன்றும் வேண்டாம், கிராமத்தில் தான் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது அதற்கு ஏதாவது உதவ வேண்டும் என்று கேட்டுள்ளார். அதுமட்டுமன்றி, நடிகர் விஷாலை பார்த்தே, "நீ ஏன் இன்னும் கல்யாணம் பண்ணாம இருக்க.. கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே... என்று இவர் கேட்டதற்கு "கல்யாணம் பண்ணிக்கிட்டா நான் ஷூட்டிங்-க்கு வந்துருவேன்.. மனைவி வீட்ல தனியா இருக்கணுமே..." என்றும் தன்னை சென்னைக்கு வந்து விடுமாறும் கூறியதாக மூதாட்டி சென்னம்மாள் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷால்-ஷூட்டிங் சென்ற  கிராமத்திற்கு குடிநீர் வசதி செய்து அசத்தல்.
 

Tags :

Share via