நடிகர் விஜய் நடித்து 19ஆம் தேதி வெளியாகியுள்ள லியோ படத்திற்கு அதிகாலை காட்சிக்கு அனுமதி
நடிகர் விஜய் நடித்து 19ஆம் தேதி வெளியாகியுள்ள லியோ படத்திற்கு அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கியுள்ளது, அரசு. காலை நாலு மணி,ஏழு மணி காட்சி19.10.2023 அன்று 5 காட்சிகள் 20, 21 ,22, 23,24 காலை ,ஏழு மணிகாட்சி என 4 காட்சிகள் திரையிடப்படலாம் என்றும் மாநில அரசு உள்துறை செயலாளருக்கு செவன் கிரீன்ஸ் பட நிறுவனம் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் ,மத்திய அரசுக்கும் இதே போன்று வேண்டுகோள் கொடுக்கப்பட்டிருந்தது. மாநில அரசு மாநில வருவாய் ஆணையாளர், காவல்துறையினர் இதற்கான உரிய வழிமுறைகளை பின்பற்றுவதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் .கடந்த ஆண்டு அஜித் நடித்த துணிவு படத்தின் அதிகாலை 4 மணி காட்சியின் பொழுது ஒரு வாலிபர் இறந்ததை அடுத்து, அதிகாலை காட்சியை நடத்த அரசு அனுமதி வழங்காமல் இருந்த நிலையில், இப்பொழுது லியோ படத்திற்கு அந்த அனுமதி வழங்கப்பட்டிருப்பது அரசியல் நெருக்கடியின் காரணமாக இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி வந்திருக்கின்றன. சமீப காலங்களில் நடிகர் விஜய் ரசிகர் மன்றத்தில் பல்வேறு பிரிவுகளை உருவாக்கி தமிழக முழுவதும் பல நலத்திட்ட உதவிகளை செய்யுமாறு தனது ரசிகர்களுக்கு பணித்திருந்ததோடு, நேரு உள் விளையாட்டு அரங்கில் வெளியாக இருந்த ஆடியோ லான்ச் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்காததை அடுத்து அது ஒரு பெரும் பிரச்சனையாக பேசப்பட்டு இருக்கின்ற சூழலில், மேலும் இந்த படத்தின் காரணமாக அசம்பாவிதங்கள் நடந்து விடக்கூடாது என்கிற காரணத்தினால் ரசிகர்கள் அதிகாலையில் படம் பார்க்க திரையரங்குகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.என்கிற கருத்து நிலவுகிறது.
Tags :