தீக்குளித்த இளம்பெண் பரிதாபமாக பலி

by Staff / 20-10-2023 04:56:58pm
தீக்குளித்த இளம்பெண் பரிதாபமாக பலி

திண்டுக்கல் அருகே உள்ள நல்லாம்பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் முத்து. அவருடைய மனைவி லீலாவதி (வயது 30). இவர்களுக்கு திருமணமாகி 7 வயதில் தர்ஷன் என்ற மகனும 4 வயதில் விகாசினி என்ற மகளும் உள்ளனர். முத்துவுக்கும் அதே பகுதியில் உள்ள அவரது சகோதரர்கள் ராமகிருஷ்ணன், பாலகிருஷ்ணன் ஆகியோருக்கும் இடையே இடப்பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

அதன்படி நேற்று முன்தினம் முத்துவுக்கும், அவரது சகோதரர்கள் ராமகிருஷ்ணன், பாலகிருஷ்ணன் ஆகியோருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த லீலாவதி, வீட்டுக்குள் சென்று தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதனைக்கண்ட முத்து மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லீலாவதி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுபாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

 

Tags :

Share via