1 கோடி மதிப்பிலான நகைகளுடன் சிக்கிய கொள்ளை கும்பல்

by Staff / 20-10-2023 05:10:05pm
1 கோடி மதிப்பிலான நகைகளுடன் சிக்கிய கொள்ளை கும்பல்

கடந்த 2021 ஆண்டு முதல் சிலைமான் மற்றும் கருப்பாயூரணி காவல் நிலைய சரகங்களில் இரவு நேரங்களில் வீட்டில் தூங்கிக் கொண்டி இருக்கும் போதே நகை மற்றும் பணத்தினை ஒரு கும்பல் கொள்ளையடித்து வந்தது. அந்தக் கும்பலைப் பிடிக்க மாவட்ட எஸ். பி சிவபிரசாத் அவர்கள் உத்தரவிட்டார்.

நேற்று முன்தினம் 18ஆம் தேதி இரவு கல்மேடு சந்திப்பு வழியாக சென்று கொள்ளையடிக்க திட்டமிட்டு இருப்பதாக தனிப்படைக்கு தகவல் கிடைத்ததால் தீவிர கண்காணிப்பில் இருந்த போதுTN 59 BK 2747 என்ற எண் கொண்ட YAMAHA R15 என்ற இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்களை சோதனையிட்ட போது கொள்ளையடிக்கத் தேவையான ஆயுதங்களை மறைத்து வைத்திருப்பதைத் தெரிந்து விசாரிக்க அவர்கள் மதுரை சக்கிமங்கலம் இளமனூர் புதூரை சேர்ந்த பேச்சிமுத்துவின் மகன் சின்னச்சாமி என்ற நரி மற்றும் சோனை என்ற சோனைச்சாமி என்றும் இவர்கள் தான் கடந்த 3 ஆண்டுகளாக தொடர் திருட்டில் ஈடுபட்டதும் தெரிந்தது

இவர்களிடமிருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 180 பவுன் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் ரொக்கம் ரூபாய் 9, 00, 000/-(ஒன்பது லட்சம்) கைப்பற்றப்பட்டது. உடந்தையாக இருந்த இவர்களுடைய அண்ணன் பெரிய கருப்புசாமி மற்றும் இவர்களுடைய பெரியம்மா ஆசைப் பொண்ணு ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

 

Tags :

Share via