4. 53லட்சம் மோசடி செய்த தேங்காய் வியாபாரியை போலீஸ் தேடுகிறது

by Staff / 20-10-2023 05:18:41pm
4. 53லட்சம் மோசடி செய்த தேங்காய் வியாபாரியை போலீஸ் தேடுகிறது

மதுரை காமராஜர் சாலையில் தனியார் வங்கியில் அடகு வைத்துள்ள நகைகள் மீட்டுத்தர கூறியுள்ளார். அடகு நகையின் அசலும் வட்டியும் சுமார் 4லட்சத்து 53ஆயிரம் கொடுத்தால் நகையை திருப்பி கொடுப்பதாக கூற நிதி நிறுவன மேலாளர் சரவணகுமார், சக பணியாளர் சபபாண்டியுடன் காரில் காமராஜர் சாலையில் உள்ள வங்கிக்கு வந்து சங்குள் காந்தியும் மற்றொருவர் சரவணன் என்ற கார்த்திக் என்பவரும் காத்திருக்க அவர்கள் மேலாளர் சரவணகுமாரிடம் அடகு ரசீதுகளை காட்டி ரூ 4 லட்சத்து 53ஆயிரத்தை பெற்றனர். வங்கியில் பணத்தை செலுத்தி நகைகளை மீட்டு வருவதாகச் சொல்லி வங்கிக்குள் சென்ற போது சரவணன், சுப பாண்டியும் காரில் இருந்தனர். வெளியே வந்த சங்குள்காந்தி தான் பணத்தை வங்கியில் கட்டிவிட்டதாகவும் வங்கி மேலாளர் வெளியே சென்றிருப்பதால் சிறிது நேரமாகும் என்பதால் இருவரையும் ரிங்ரோட்டில் உள்ள தேங்காய்க் கடைக்கு அழைத்து சென்றுள்ளார்.பின்னர் அங்கிருந்து சங்குள் காந்தியும் , சரவணன் என்ற கார்த்திக்கும் தப்பிவிட்டனர். காத்திருந்த நிதி நிறுவன மேலாளர் தன்னை ஏமாற்றி பணத்தை மோசடி செய்தது தெரிந்தது. இது குறித்து தெப்பக்குளம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

 

Tags :

Share via