சீமான் வழக்கு 11 ஆண்டுகளாக நிலுவையில் வைத்தது ஏன்

by Staff / 20-09-2023 02:19:27pm
சீமான் வழக்கு  11 ஆண்டுகளாக நிலுவையில் வைத்தது ஏன்

புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்ற பிறகும் சீமான் மீதான வழக்கை 11 ஆண்டுகளாக நிலுவையில் வைத்தது ஏன்? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதற்கு போலீசார் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் விஜயலட்சுமியின் புகார்கள், வாபஸ் பெற்ற விவரங்களை போலீசார் தாக்கல் செய்யவேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சீமான் தரப்புக்கு வழங்க உத்தரவிட்டு இந்த வழக்கு செப்டம்பர் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via