போதை ஊசி செலுத்திக்கொண்ட இளைஞர் உயிரிழப்பு
சென்னை ஓட்டேரி பின்னி மைதானத்தில் போதை ஊசி செலுத்தியதில் மயக்கம் அடைந்த இளைஞர் தீபக்நாத் (23) உயிரிழந்தார். தீபக்நாத் மயங்கி விழுந்து கிடந்த இடத்தில் மருந்துகள், ஊசிகள் கிடந்ததாக போலீசாரின் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. மயங்கிய நிலையில் இருந்த அவரை ஸ்டான்லி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பிவைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இளைஞரின் தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :