6 வாலிபர்கள் மீது பாய்ந்தது குண்டாஸ்

by Staff / 20-10-2023 04:51:28pm
 6 வாலிபர்கள் மீது பாய்ந்தது குண்டாஸ்

தூத்துக்குடி அருகே உள்ள தட்டப்பாறை திம்மராஜபுரத்தை சேர்ந்தவர் அங்குபாண்டியன். இவருடைய மகன் பொன்முத்துராம் (வயது 20). இவரை புதுக்கோட்டை போலீசார் கொலை வழக்கில் கைது செய்தனர். இதே போன்று தூத்துக்குடி அம்பேத்கர் நகரை சேர்ந்த மூதாட்டி அந்தோணியம்மாள் (67) என்பவரை கொலை செய்த வழக்கில் அதே பகுதியை சேர்ந்த வெள்ளப்பாண்டி மகன் சந்தனராஜ் (23) என்பவரை வடபாகம் போலீசார் கைது செய்தனர்.செய்துங்கநல்லூர் கால்வாய் பகுதியை சேர்ந்த சுடலைகண்ணு மகன் தெய்வக்கண்ணன் (35) என்பவரை செய்துங்கநல்லூர் போலீசார் கொலை வழக்கில் கைது செய்தனர். மேலும் முறப்பநாடு பகுதியில் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்டதாக முறப்பநாடு பாறைக்காடு பகுதியை சேர்ந்த பரமசிவம் மகன் சிவசிதம்பரம் (19), முறப்பநாடு அகரத்தை சேர்ந்த பொன்இசக்கி மகன் ராமசாமி என்ற ராம் (19), வல்லநாட்டை சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் துரைப்பாண்டி என்ற ஒத்த கை துரைப்பாண்டி (21) ஆகியோரை முறப்பநாடு போலீசார் கைது செய்தனர்.இவர்கள் 6 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், பொன்முத்துராம், சந்தனராஜ், தெய்வக்கண்ணன், சிவசிதம்பரம், ராமசாமி என்ற ராம், துரைப்பாண்டி என்ற ஒத்த கை துரைப்பாண்டி ஆகியோரை கைது செய்ய உத்தரவிட்டார்.

 

Tags :

Share via