இரண்டு பிணைக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்

by Staff / 21-10-2023 12:12:00pm
இரண்டு பிணைக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்

ஹமாஸ் அமைப்பினர் தங்களிடம் பிணைக் கைதிகளாக இருந்த அமெரிக்க தாய் மற்றும் மகளை விடுவித்தனர். ஜூடித் டாய் ரானன் மற்றும் அவரது மகள் நாட்டாலி ரானன் இருவரும் 14 நாள்களுக்கு பிறகு மீண்டும் இஸ்ரேல் திரும்பியுள்ளனர். அவர்களது உடல் நிலை குறித்த தகவல்கள் எதுவுமில்லை. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், விடுவிக்கப்பட்ட இரண்டு பேரிடமும் அலைபேசி வழியாகப் பேசி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். கத்தார் மற்றும் எகிப்து, குடிமக்களை விடுவிக்கக் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த நடவடிக்கையை, ஹமாஸ் எடுத்துள்ளதாகவும் இன்னும் நிறைய பேர் விடுவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் நம்பப்படுகிறது.

 

Tags :

Share via