மணிப்பூர் இணையதள தடை நீட்டிப்பு

by Staff / 02-11-2023 12:07:31pm
மணிப்பூர் இணையதள தடை நீட்டிப்பு

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் கலவரத்தில் மெய்தி இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் பழங்குடியின பெண்ணை நிர்வாணமாக்கி இழுத்துச் சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மணிப்பூர் கலவரத்தை அடுத்து, செல்போன் இணையத் தடையை வரும் 5-ம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது. முன்னதாக, மொபைல் இன்டர்நெட் மீதான அரசின் தடை அக்டோபர் 31ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மோரே நகரில் மூத்த போலீஸ் அதிகாரி சிங்டம் ஆனந்த் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மொபைல் இணையத்திற்கான தடையை அரசாங்கம் மேலும் 5 நாட்களுக்கு நீட்டித்துள்ளது.

 

Tags :

Share via