தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடிப்பு.
ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற தமிழக மீனவர்களைஇலங்கை கடற்படையினர் விசைப்படகுகளையும் மீனவர்களையும் சிறை பிடித்துள்ளன.ர் .இந்திய கடல் எல்லை பகுதியை தாண்டி மீன்பிடிக்க சென்றதாகக்கூறி, தமிழக மீனவர்களை தொடர்ந்து இலங்கை படையினர் கைது செய்வதும் அவர்களுடைய படகுகளை சிறை பிடிப்பதுமான நிகழ்வு தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், இன்று அதிகாலை நெடுந்தேவு கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த விசைப்படகையும் 14 பேரையும் இலங்கை கடலோர காவல் பிரிவின கைது செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மீனவ மக்களிடம் பதற்றமான ஒரு சூழலில் உருவாகி இருக்கிறது. கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை அரசு உரிய முறையில் பாதுகாத்திட வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
Tags :