சரண் அடைவதற்கு முன்பு லைவ் வீடியோ வெளியிட்ட டொமினிக் மார்ட்டின்.
கேரளா குண்டுவெடிப்பு - சரணடைந்தவர் வெளியிட்ட வீடியோ.கொடக்கரா காவல் நிலையத்தில் சரணடைந்த மார்ட்டின் வெளியிட்ட வீடியோவில் பரபரப்பு.குண்டு வைத்ததாக சரணடைந்த டொமினிக் மார்ட்டின் யெகோவா சாட்சிகள் சபையின் உறுப்பினராக இருந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது."சபையின் செயல்பாடு தனக்கு பிடிக்கவில்லை என்பதால் கடந்த 4 ஆண்டுகளாக சபையின் கூட்டங்களுக்கு செல்வதில்லை"என்றும் அந்த லைவ் வீடியோவில் அவர் பேசியுள்ளார்.
இந்தநிலையில் யார் குற்றவாளி என தெரியாமல் குழப்பத்தில் இருந்த நிலையில்
காவல்நிலையத்தில் சரணடைந்தவரே குற்றவாளி"கேரளா குண்டுவெடிப்பு சம்பவத்தில் காவல்நிலையத்தில் சரணடைந்த டொமினிக் மார்ட்டின் தான் குற்றவாளி.விசாரணைக்கு பிறகு டொமினிக் மார்ட்டின் என்பவரே குற்றவாளி என்பதை உறுதி செய்தது கேரள காவல்துறை.இதன்தொடர்ச்சியாக இந்த சம்பவத்தை பொதுமக்கள் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக தவறான கருத்துக்களை பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படுமென கேரளா அரசு எச்சரிக்கை செய்துள்ளது.
Tags : சரண் அடைவதற்கு முன்பு லைவ் வீடியோ வெளியிட்ட டொமினிக் மார்ட்டின்.