ஏற்காட்டில் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய 3 பேர் கைது
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள தனியார் விடுதிகள் மற்றும் சொகுசு பங்களாக்களில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஒண்டிக்கடை பகுதியில் உள்ள காட்டேஜ் சொகுசு பங்காளவில் விபச்சாரம் நடைபெறுவது தெரியவந்தது. உடனே, அங்கு சென்ற போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இதில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ்(45) என்பவரின் பங்களாவை வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்தியது தெரிய வந்தது. சேலம் அம்மாபேட்டை சேர்ந்த விஜய்(26), மலரவன்(30) ஆகியோர் சேர்ந்து விபசார தொழிலில் ஈடுபட்டது தெரிந்தது. உடனே, 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 2 பெண்களை மீட்டனர். தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Tags :