சாதியை சொல்லி தாக்குதல் 3 போலீசாரை சஸ்பெண்ட் செய்ய ஆணை

by Staff / 03-11-2023 12:24:37pm
சாதியை சொல்லி தாக்குதல் 3 போலீசாரை சஸ்பெண்ட் செய்ய ஆணை

கடந்த 2016 ஆம் ஆண்டு திருமண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தோக்கவாடியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ராஜா அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் பேசி கொண்டிருந்தனர். அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அங்கு வந்த உதவி ஆய்வாளர் முருகன், காவலர்கள் நம்மாழ்வார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் அவர்களை சாதி ரீதியாக திட்டி கண்மூடித்தனமாக தாக்கிய காட்சிகள் சமூக வலைத்தளங்களின் பரவி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

தங்களை தாக்கிய உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேர் மீதும் வழக்கு பரிவு செய்யக்கோரி ராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது, குடும்பத்தினரை தாக்கிய காவலர்கள் மீது இதுவரை வழக்கு பதிவு செய்யாததற்கு நீதிபதி கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, சாதி பெயரை குறிப்பிட்டு தாக்கிய மூன்று காவலர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.பாதிக்கப்பட்ட மூன்று பேருக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, இழப்பீட்டு தொகையை காவலர்கள் மூன்று பேரிடமிருந்து வசூலிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.காவலர்கள் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை முடிக்க உத்தரவிட்ட நீதிபதி அதுவரை அவர்களை பணியிட நீக்கம் செய்யவும் உத்தரவிட்டார்.

 

Tags :

Share via