திருப்பதியில் அக்சர் பட்டேல், ரிஷப் பண்ட்
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் காயத்தில் இருந்து மீண்ட அக்சர் பட்டேலும், ரிஷப் பண்ட்டும் இன்று திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், ரசிகர்களுடன் புகைப்படங்கள் எடுத்து கொண்டனர். பின்னர், காவலர்கள் உதவியுடன் பத்திரமாக வெளியே வந்தனர். இதுகுறித்து ரிஷப் பண்ட் தனது இன்ஸ்டா பக்கத்தில், "இந்த இடத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. நிறைய பாசிட்டிவ் எனர்ஜி கிடைத்தது" என பதிவிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Tags :