சென்னை கெரும்கம்பாக்கத்தில் நடிகை ரஞ்சனா நாச்சியார் கைது 

by Editor / 04-11-2023 09:48:45am
சென்னை கெரும்கம்பாக்கத்தில் நடிகை ரஞ்சனா நாச்சியார் கைது 

சென்னை குன்றத்தூரில்  நேற்று அரசு பேருந்தில் தொங்கியபடி சென்ற மாணவர்களை அடித்ததாகவும் ஒட்டுனர் மற்றும் நடத்துனரை அவதூறாக பேசியதாகவும் நடிகையும் வழக்கறிஞருமான ரஞ்சனா நாச்சியாரை இன்றுகாலையில் சென்னை கெரும்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற காவல்துறையினர்  அவரை கைதுசெய்ய சென்றபோது அவருக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.மேலும் தன்னை கைதுசெய்ய வாரண்ட் இருக்கிறதா என்றும் ,தான் காரில்தான் காவல்நிலையம் வ்ருவதாகவும் அவர் தெரிவித்தநிலையில் அதற்க்கு காவல்துறையினர் மறுத்து அவரை கைது செய்து மாங்காடு காவல் நிலையம் அழைத்து சென்றனர்.அவர் மீது அரசு பேருந்தை தடுத்து நிறுத்தியது, மாணவர்களை தாக்கியது, ஆபாசமாக பேசியது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூகவலைதளங்களில் வீடியோ வைரலான நிலையில், பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் சரவணன் போலீசில் அளித்த புகாரின் காரணமாக அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சென்னை கெரும்கம்பாக்கத்தில் நடிகை ரஞ்சனா நாச்சியார் கைது 
 

Tags : சென்னை கெரும்கம்பாக்கத்தில் நடிகை ரஞ்சனா நாச்சியார் கைது 

Share via