வடகிழக்கு பருவமழை நோய்களை தடுக்க : இன்று 1000 இடங்களில் மருத்துவ முகாம். 

by Editor / 05-11-2023 08:17:53am
வடகிழக்கு பருவமழை நோய்களை தடுக்க : இன்று 1000 இடங்களில் மருத்துவ முகாம். 

தமிழகத்தில் இரண்டாவது வாரமாக இன்று 1000 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. மழைக்கால நோய்களை தடுப்பதற்காக அரசின் சார்பில் 10 வாரங்களுக்கு இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன. குறிப்பாக டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு போராடி வருகிறது. கடந்த வாரம் 1,943 இடங்களில் நடத்தப்பட்ட முகாமினால் 1,04,876 பேர் பயனடைந்தனர். தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு, சளி தொல்லை உள்ளவர்கள், வறண்ட தொண்டை இருமல், சேற்றுப்புண் போன்ற பல்வேறு மழைக்கால உபாதைகள் உள்ளவர்கள் இந்த மருத்துவ முகாம்களை அணுகி பயன் பெறலாம்.

 

Tags : வடகிழக்கு பருவமழை நோய்களை தடுக்க : இன்று 1000 இடங்களில் மருத்துவ முகாம். 

Share via