அண்ணன் குடும்பத்தை கொன்ற தம்பி
கர்நாடக மாநிலத்தில் சொத்து தகராறு காரணமாக அண்ணி மற்றும் அண்ணனின் 2 குழந்தைகளை வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்த குமார் கவுடா என்பவர் தனது மூத்த சகோதரர் ஹொன்னே கவுடாவின் மனைவி கீதா மாரி கவுத்ரா (32), குழந்தைகள் அகுல் (10), அங்கிதா (8) ஆகியோரை வெட்டிக் கொலை செய்துள்ளார். குடும்ப தகராறு மற்றும் சொத்து தகராறு காரணமாக இந்த கொலைகள் நடந்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனட். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :