குடிக்க பணம் தராததால் தாய் மீது கொடூர தாக்குதல்

by Staff / 14-07-2023 03:06:32pm
குடிக்க பணம் தராததால் தாய் மீது கொடூர தாக்குதல்

தெலங்கானா மாநிலத்தில் மது குடிக்க பணம் தராததால் நடுரோட்டில் தாயை மகன் கொடூரமாக அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் நாகர்குர்னூரைச் சேர்ந்த சந்தோஷ் என்ற இளைஞர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இதனால், அவனது தாய் பத்மம்மா குடும்பத்தை நடத்துவதற்காக ஒரு ஹோட்டலில் சர்வராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று தனது தாயிடம் சந்தோஷ் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். தாய் பணம் தராததால் நடு ரோட்டில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

 

Tags :

Share via