பொங்கல் பண்டிக்கைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்புவதால் புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் 

by Editor / 18-01-2024 12:05:49am
பொங்கல் பண்டிக்கைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்புவதால் புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் 

பொங்கல் பண்டிகையை ஒட்டி தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை காரணமாக லட்ச கணக்கானோர் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு தங்கள் குடும்பங்களுடன் சென்றனர். இதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. அதோடு தெற்கு ரயில்வே சார்பிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் பயணித்தவர்களுக்கு நிகராக சொந்த வாகங்களில் தங்கள் சொந்த ஊருக்கு சென்றவர்களின் எண்ணிக்கையும் லட்ச கணக்கில் இருந்தது.

இந்நிலையில் இன்றோடு விடுமுறை முடிவதால் சொந்த ஊர் சென்றவர்கள் அனைவரும் சென்னைக்கு திரும்பி வருகின்றனர். இதனால் சென்னை புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, பெருங்களத்தூர்- தாம்பரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கார்கள், பேருந்துகள் எண்ணிகை அதகளவில் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. வண்டலூரில் இருந்து தாம்பரம் வரை வாகனங்கள் அணி வகுத்து நின்கின்றன. அமை வேகத்தில் வாகனம் நகர்வதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் போதும் நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் பலமணி நேரம் வாகன நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலைக்கு மக்கள் ஆளாகியுள்ளனர்.

 

Tags : பொங்கல் பண்டிக்கைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்புவதால் புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் 

Share via