அன்று நெய்வேலி... இன்று திருநெல்வேலி
நடிகர் விஜய் 'மாஸ்டர்' படப்பிடிப்பின் போது அவரது வீட்டிலும் படப்பிடிப்பு நடந்த நெய்வேலியிலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனைக்காக வந்தனர். இதனை அறிந்த அவரது ரசிகர்கள் நெய்வேலியில் படப்பிடிப்பு நடந்த இடத்தில் குவிந்தனர். பின்னர் நடிகர் விஜய் அவரது ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வேன் ஒன்றில் ஏறி நின்று செல்ஃபி எடுத்தார். அது இணையத்தில் வைரலானது. தற்போது வெள்ள நிவாரணம் வழங்க திருநெல்வேலி சென்றிருக்கும் நடிகர் விஜய் அங்கு கூடிய ரசிகர்களுடன் எடுத்த செல்ஃபி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Tags :