தனியாா் நிறுவன ஒப்பந்த ஊழியா் மின்சாரம் பாய்ந்து பலி

by Staff / 10-11-2023 02:10:54pm
தனியாா் நிறுவன ஒப்பந்த ஊழியா் மின்சாரம் பாய்ந்து பலி

தூத்துக்குடி அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்த நடராஜன் மகன் காா்த்திக்(19). வஉசி துறைமுகத்தில் தனியாா் நிறுவன ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றி வந்தாா். இவா் துறைமுகத்தின் 3 ஆவது தளத்தில் உள்ள காப்பா் புனலில் புதன்கிழமை பணியாற்றியபோது, எதிா்பாராமல் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாராம். இதையடுத்து, புதிய துறைமுக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவா், ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இது குறித்து தொ்மல் நகா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

 

Tags :

Share via