ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

by Editor / 20-11-2023 08:23:51am
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மீன்பிடித்துறைமுகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 60-க்கும் மேற்பட்ட படகுகள், மீன்பிடி வலைகள் எரிந்து வரும் நிலையில், 10க்கும் மேற்பட்ட தீயணைப்புவாகனத்தில் தீயணைப்புத்துறையினர் கடுமையாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவருவதற்கான பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். படகுகளில் டீசல், எண்ணெய், சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்டவை இருந்ததால் சிலிண்டர்கள் வெடித்து தீ மளமளவென பரவியுள்ளது.இதில் 30 கோடி ரூபாய் மதிப்பிலான பைபர் உள்ளிட்ட படகுகள் எரிந்து நாசமாகியிருக்கலாமென முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Tags : ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

Share via