குற்றவாளிகளை தப்பவிட்டு மீண்டும் விசாரணையா: ராமதாஸ்

by Staff / 23-01-2024 05:31:04pm
குற்றவாளிகளை தப்பவிட்டு மீண்டும் விசாரணையா: ராமதாஸ்

வேங்கைவயல் மக்களுக்கு நீதி வழங்க தமிழக அரசு தொடக்கம் முதலே ஆர்வம் காட்டவில்லை என ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் காவல்துறை தப்பவிட்டுள்ளது. ஏற்கெனவே 31 பேரிடம் நடைபெற்ற டிஎன்ஏ சோதனை ஒத்துப்போகாத நிலையில், தற்போது, மேலும் 10 பேரிடம் சோதனை நடத்த நீதிமன்றத்திடம் அனுமதி கோரியிருக்கிறது. இது தமிழக அரசுக்கு இழுக்கான ஒன்று என அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via