கல்லூரி மாணவி தற்கொலை 100 பேரிடம் சி பி சி ஐ டி விசாரணை
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குலசேகரம் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தூத்துக்குடி பகுதியை சார்ந்த முதுநிலை மருத்துவம் படித்து வந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். கல்லூரி பேராசிரியர் பரமசிவம் மாணவர்கள் ப்ரீத்தி, ஹரிஷ் உட்பட வழக்கு தொடர்புடையவர்களாக கருதப்படும் 100 பேரிடம் இதுவரை சி பி சி ஐ டி போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணை முக்கிய கட்டத்தை அடைந்துள்ளதாகவும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
Tags :