மீனவர்கள் நாட்டின் முதல் பாது காவலர்கள்; ஆளுநர் ரவி பேச்சு

by Staff / 21-11-2023 02:44:05pm
மீனவர்கள் நாட்டின் முதல் பாது காவலர்கள்; ஆளுநர் ரவி பேச்சு

தூத்துக்குடியில் உலக மீனவர் தின விழாவில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பேசும்போது தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்து இருக்கிறமீனவ சகோதர சகோதரிகளுக்கு உலக மீனவர் தினம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் மீனவர்களின் குறைகளை கேட்டறிந்து மத்திய மாநில அரசுகளுக்கு எடுத்துரைத்துள்ளேன் மத்திய அமைச்சர்களிடம் நேரடியாக மீனவர்களின் குறைகளை கூறினேன்மீனவர்களின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன் மீனவர்கள் நாட்டின் வளர்ச்சியில்வருமானத்தில் முக்கிய பங்கு வகிக்ன்றனர் உயிரை பணயம் வைத்து மீன் பிடி தொழிலில் ஈடுபடுகின்றனர்


மீனவர்கள் நாட்டின் முதல் பாது காவலர்களாக இருக்கின்றனர் நிறைய பாதுகாப்பு படைகள் இருந்தாலும் கடற்கரையை பாதுகாப்பது மீன வர்கள் கடற்கரை போலீசில் நிலவை இளைஞர்கள் பெண்கள் பங்கு பெற வேண்டும் கடலை பாதுகாப்பது அனைவராலும் முடியாது கடற்கரை போலீஸ் நபர்கள் நீச்சல் கூட அடிக்க முடியாத நபர்களாக இருக்கிறார்கள் அவர்களின் செல்லும்போது ஆபத்து ஏற்பட்டால் எப்படி நாம் பிழைக்க முடியும்.கூடிய விரைவில் மத்திய அரசாங்கம் சார்பில் கடற்கரை போலீசில் மீனவ இளைஞர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் பேசினார்.

 

Tags :

Share via